நாகர்கோவிலை பூர்விகமாகக் கொண்ட பார்வை மாற்றுத்திறனாளியான கோமகன், சென்னை மாதவரத்தில் உள்ள தேசிய பார்வையற்றோர் சங்கத்தில் பணிபுரிந்து வந்தார். அவ்வப்போது இசைக் கச்சேரிகளையும் நடத்தி வந்தார்.
![comagan](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11658289_komagan.jpg)
சென்னை ரயில் பெட்டித் தொழிற்சாலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டில் அவருக்கு அரசு வேலை கிடைத்தது. 2019ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது இவருக்கு கிடைத்தது.
இந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டு ஐசிஎப் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த கோமகன், இன்று (மே.6) அதிகாலை 1 மணியளவில் காலமானார். அவரது மறைவுக்கு இயக்குநர் சேரன் உட்பட திரைப்பிரலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.